நத்தத்தில் கலைஞர் நுாலகம் திறப்பு
நத்தம் நத்தத்தில் கே.எஸ்.எஸ்.எம்., காம்ப்ளக்சில் புதிய கலைஞர் நுாலகம் திறப்பு விழா நடந்தது.தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். அப்போது அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் சக்கரபாணி, மூர்த்தி, எம்.எல்.ஏ., செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி, தர்மராஜன், மோகன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா செய்திருந்தார்.