உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாளை கந்த சஷ்டி விழா துவக்கம்

நாளை கந்த சஷ்டி விழா துவக்கம்

பழநி: பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை (அக்.22ல்) துவங்க உள்ளது. பழநி முருகன்கோயிலில் நாளை (அக்.22ல்) உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்க உள்ளது. நாளை முதல் சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பர புறப்பாடு நடைபெறும். 6ம் நாள் (அக்.27) மாலை சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி,தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, மலைக் கோயிலில் இருந்து சின்ன குமாரசுவாமி, அடிவாரம் எழுந்தருள்வார். சஷ்டி விரதம் விரதத்தில் அன்று வாழைத்தண்டை படையலிட்டு வழிபடுவர். அன்று கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும். அதில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரிநிதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் ஆகிய நான்கு சூரர்களை வதம் செய்ய சின்ன குமாரசுவாமி எழுந்தருள்வார். அதன் பின் இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறும். ஏழாம் நாளான அக்.28ல் முருகன் கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி,தெய்வானை சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்று மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, சுவாமி தங்க குதிரையில் திருஉலா நடைபெறும். பக்தர்கள் சஷ்டி விரதம் முடிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ