கும்பாபிேஷக முகூர்த்த கால் நடுதல்
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துர்நாச்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.பழநி சண்முக நதி அருகே பைபாஸ் சாலையில் உள்ள இக்கோயில் புனரமைக்கும் பணிகள் சில மாதங்களாக நடைபெற்றது. இதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முகூர்த்தகாலுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர்.