உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா

சித்தையன்கோட்டை : சித்தையன்கோட்டையில் ஸ்ரீ செந்தாமரை சப்த கன்னியர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், தீர்த்தம் அழைப்பு, விக்னேஷ்வர பூஜை, மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. அமைச்சர் பெரியசாமி, கலந்து கொண்டார். கிராம மக்கள் சார்பில், பரிவட்டத்துடன் சிறப்பு மரியாதை, பிரசாதம் வழங்கல் நடந்தது. ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி