உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலைப்பகுதியில் லொடக்கு பஸ்கள்; பயணிகள் அவதி

மலைப்பகுதியில் லொடக்கு பஸ்கள்; பயணிகள் அவதி

தாண்டிக்குடி : தாண்டிக்குடியில் மலை ரோட்டில் அரசு பஸ் பழுதாகி பாதி வழியில் நின்றதால் பயணிகள் பரிதவித்தனர்.வத்தலக்குண்டில் இருந்து நேற்று காலை ஆடலுார் செல்லும் அரசு பஸ் தாண்டிக்குடி சித்தரேவு மலை ரோட்டில் பழுதாகி நின்றது. ஏராளமான பயணிகள் பயணித்த நிலையில் அவதியடைந்தனர்.அடிக்கடி இம்மலை ரோட்டில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பழுதாவதால் பயணிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். வத்தலக்குண்டு அரசு கிளை மூலம் ஏராளமான பஸ்கள் மலைப்பகுதிக்கு இயக்கப்படும் நிலையில் அவை இஞ்ஜின் பழுது, ரேடியேட்டர், பிரேக், மாற்று டயர் இல்லாத நிலை உள்ளிட்ட பழுதுகளால் பாதி வழியில் நிற்கும் பரிதாபம் உள்ளது. இதை சீர் செய்ய இனியாவது போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை