அனைத்து நிலைகளிலும் சிறப்பான பணி அமைச்சர் சக்கரபாணி புகழாரம்
ஒட்டன்சத்திரம் : அனைத்து நிலைகளிலும் சிறப்பாக பணியாற்ற கூடியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், எல்லப்பட்டி ஊராட்சி துறையூரில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அவர் பேசியதாவது: நகர்ப்புற மக்களுக்கு இணையாக கிராம மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என்றார். ஆர்.டி.ஓ., கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், தாசில்தார் சஞ்சய் காந்தி, பி.டி.ஓ.,க்கள் காமராஜ் பிரபு பாண்டியன், வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர் சுதாதேவி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா கலா, ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் கலந்து கொண்டனர்