அலுவலக கட்டடம் திறப்பு
திண்டுக்கல்: மல்லிகை நகர் குடியிருப்போர் நலச்சங்க அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க செயலாளர் வைத்தியலிங்க பூபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொருளாளர் சேதுராமன், கவுரவ தலைவர் ஆனந்தன், துணைத்தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் ரேவதி குத்து விளக்கேற்றினர். ஆலோசனை கூட்டத்தில் திராவிட ராணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.