திரு இருதய கல்லுாரியில் கலையரங்கம் திறப்பு
சாணார்பட்டி, : சாணார்பட்டி அருகே ஆர்.எம்.டி.சி., காலனி திரு இருதய கலை அறிவியல் கல்லுாரியில் கலையரங்கம் திறப்பு விழா, கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.கலையரங்கத்தை இருதய சகோதரர்கள் சபை விக்டர்தாஸ் திறந்து வைத்தார்.விஞ்ஞானி பிரான்சிஸ் சேவியர், திட்ட இயக்குனர் டி.ஏ.சி.ஏ., ஆசீர்வதித்தார். ஆங்கிலத் துறை தலைவர் ஜெனிடா வரவேற்றர். நிகழ்ச்சியை மாணவர் ஜெய் சூர்யா,மாணவி முத்து வீரலட்சுமி தொகுத்து வழங்கினர்.இருதய சகோதரர்கள் சபை டென்னிஸ் மைக்கேல், ஆல்பர்ட் சேவியர், ஞானப்பிரகாசம், அருள்ராஜ், ஆரோக்கியராஜ்,சித்தையன்கோட்டை அரசு பள்ளி ஆசிரியர் சலேத் ராஜா,தோட்டனுாத்து ஊராட்சி தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன்,பிரம்ம குமாரி ராணி கலந்து கொண்டனர். செயலாளர் இன்னாசிமுத்து வரவேற்றார். வளாக ஆலோசகர் லூர்துராஜ்,விடுதி இயக்குனர் ஆரோக்கியசாமி கலந்து கொண்டனர். புலத்தலைவர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.