உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழனி கோவில் டூ இடும்பன் மலைக்கு ரோப் கார் அமைக்கும் பணிக்கு ஆய்வு

பழனி கோவில் டூ இடும்பன் மலைக்கு ரோப் கார் அமைக்கும் பணிக்கு ஆய்வு

பழனி : பழனி இடும்பன் மலையில் கட்டப்படும் படிப்பாதை நிழல் மண்டபங்களுக்கான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல, 'வின்ச்' அமைக்கும் பணி நடக்கிறது.திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் அருகே இடும்பன் மலை உள்ளது. இங்கு, 540படிகள் உள்ளன. மலை மீது, 13 அடி உயரமுடைய இடும்பன் சிலை உள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திர நாட்களில், பக்தர்கள் அதிகளவில் இங்கு சென்று வழிபடுகின்றனர்.தற்போது இங்கு, பழனி கோவில் பெருந்திட்ட வரைவு வாயிலாக, படிப்பாதையில் ஐந்து நிழல் மண்டபங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கான கட்டுமான பணிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல சிரமம் உள்ளது. தொடர்ந்து, பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக இடும்பன் மலையில் வின்ச் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.கோவில் இணை கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது: வின்ச் வாயிலாக கட்டுமான பொருட்களை எளிதாக கொண்டு சென்று, விரைவில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இடும்பன் மலைக்கு பழனி முருகன் கோவில் மலையில் இருந்து ரோப் கார் அமைக்கும் திட்டம், தனியாக செயல்படுகிறது. இதற்காக, மத்திய அரசு நிறுவனம் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. திட்ட மதிப்பீடு பெறப்பட்ட பின் அதற்கான பணி, தமிழக அரசிடம் அனுமதி பெற்று நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை