உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊட்டச்சத்து உதவி வழங்கல்

ஊட்டச்சத்து உதவி வழங்கல்

ஆத்துார் ஆத்துார் அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு , தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் ஆதரவற்ற பின்தங்கிய காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது. டாக்டர் அரவிந்த் நாராயணன் தலைமை வகித்தார். டாக்டர் கவுசிகன் ஆலோசனை வழங்கினார். ரீச் தொண்டு நிறுவன ஆர்வலர் கவின்குமார் வரவேற்றார்.காசநோய் பிரிவு மருத்துவ அலுவலர் சத்திரப்பிரியா, சித்தா பிரிவு மருத்துவர் சர்மிளாதேவி, மூத்த ஆய்வக நுட்பவியலாளர் ராம்குமார், அச்சாணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமு முன்னிலை வகித்தனர்.காசநோயாளிகளுக்கு உணவு பொருட்கள் கொண்ட பெட்டகம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை