உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

சின்னாளபட்டி:காந்திகிராம பல்கலையில் கணினி அறிவியல் பயன்பாட்டு துறை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தரவு அறிவியல் மையம் சார்பில் 'டிரிவிஸ்டா 2026' கருத்தரங்கம் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் ஏ.ஐ., தொடக்க நிலை மாணவர்களுக்கான புத்தகத்தை வெளியிட்டார். பல்கலை பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி, துறை தலைவர் மேரி சாந்தி ராணி, ஒருங்கிணைப்பாளர் சண்முக வடிவு, அயர்லாந்து லிமெரிக் பல்கலை ஆய்வாளர் தமிழினியன், ஹைதராபாத் தனியார் நிறுவன செயற்கை நுண்ணறிவு துறை தலைவர் ஜாபர்சா ஜஹாங்கீர் முன்னிலை வகித்தனர். மார்பக புற்றுநோய், லுக்கிமியா, தாவர நோய் கண்டறிதல், முக உணர்வு அடையாளம் காணுதல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த 15 அம்சங்களை மையமாக கொண்டு மாணவர்களின் மாதிரிகள் உருவாக்கப்பட்ட கண்காட்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி