நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
பழநி: பழநியில் ஆண்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவங்கி வைத்தார். நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் வேலுமணி, இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ., கூறியதாவது : ரயில்வே மேம்பாலம் பணி துவங்கும், அரசு மருத்துவமனை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. டிசம்பரில் முதலமைச்சர் திறந்து வைப்பார், என்றார்.