நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
வடமதுரை: பொது சுகாதாரத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் நடந்தது. காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா, பேரூராட்சி தலைவர் நிருபாராணி முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலாளர் கணேசன் வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், செயல் அலுவலர் பத்மலதா, வட்டார மருத்துவ அலுவலர் நாகேந்திரன் பங்கேற்றனர்.