மாணவர் சிறப்பு முகாம்
திண்டுக்கல் : பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக உயர்வுக்குப்படி என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நான்காவது கட்டமாக புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். உதவி கலெக்டர் (பயிற்சி) வினோதினி பார்த்திபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் பிரபாவதி கலந்துகொண்டனர்.