ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நத்தம், : தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரமணி 26, கொலையை கண்டித்து செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக விரோதிகளால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாது பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டி கோரிக்கை எழுப்பப்பட்டது.