உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இ சேவை சர்வர் பாதிப்பால் அவதி

இ சேவை சர்வர் பாதிப்பால் அவதி

பழநி ; பழநியில் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொது இ சேவை மையம் சர்வர் பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.பழநி பகுதியில் ஆதார் கார்டு திருத்தம் செய்ய அரசு சார்பில் பொது இ சேவை மையம் நகராட்சி அலுவலகம், தலைமை தபால் நிலையம், தாலுகா அலுவலகம் என மூன்று இடங்களில் செயல்படுகிறது. சில நாட்களாக தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொது இ சேவை மையம் சர்வர் பாதிப்பு காரணமாக முடங்கியது . இங்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி