விபத்தில் தொழிலாளி பலி
நத்தம்: நத்தம் சாணார்பட்டி- புதுக்கலிக்கம்பட்டியை சேர்ந்த தனியார் ஊழியர் துரைராமகிருஷ்ணன் 34. இவர் கடந்த டிச.15 ல் தன் டூவீலரில் அரவங்குறிச்சியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். மணக்காட்டூர் பேயம்பட்டி பகுதியில் வந்தபோது ரோட்டோர பள்ளத்தில் டூவீலர் மோதி காயமடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் நேற்று இறந்தார். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.