பட்டாக்கத்தியுடன் மிரட்டல்
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு எஸ்.ஐ., முனியாண்டி தலைமையிலான போலீசார் திண்டுக்கல் பழைய காப்பிளியபட்டி பிரிவு பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். அப்போது பட்டாக்கத்தியுடன் நின்ற இருவரை சுற்றி வளைத்த போது கத்தியை காட்டி மிரட்டினர். மிரட்டலை மீறி போலீசார் மடக்கி பிடிக்க முயன்ற போது அங்கிருந்த ஒருவர் தப்பினார். எரமநாயக்கன்பட்டி பிரேம்குமார் 30, கத்தியுடன் பிடிபட்டார்.