மேலும் செய்திகள்
வனக்காப்பாளர் குடியிருப்புகள் சேதம்
30-Oct-2024
செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே டூவீலர் -லாரி மோதியதில் வனக்காப்பாளர் உட்பட மூவர் பலியாகினர்.பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவை சேர்ந்தவர் ராமசாமி 35. கன்னிவாடி வனச்சரகத்தில் செங்கட்டாம்பட்டி பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். தேனி மாவட்டம் போடியை சேர்ந்த உறவினர் மகன் அருண்பாண்டி 20, இவரது வீட்டில் தங்கி ஒட்டன்சத்திரம் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். நேற்று இரவு ராமசாமி டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) அருண்பாண்டி, அவருடன் படிக்கும் அரவிந்த் பாண்டி 21, உடன் திண்டுக்கல்--குமுளி ரோட்டில் வந்தார். கூலம்பட்டி விலக்கு அருகே லாரி மோதியது. இதில் மூவரும் பலியாகினர்.
30-Oct-2024