கொடை யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவிய ரம்யமான சூழலை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.இரண்டு வாரங்களாக வறண்ட வானிலை நீடித்த இங்கு சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் அரை மணி நேரம் மழையும் பெய்தது. தொடர்ந்து நகரில் தரையை தொடும் மேகக் கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது. இதனால் இங்கு வந்த சுற்றுலா பயணிகள் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.