உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் வாகன ஆய்வாளர் ஆய்வு; 3 கார்கள் பறிமுதல்; ரூ. 1.25 லட்சம் அபராதம்

கொடையில் வாகன ஆய்வாளர் ஆய்வு; 3 கார்கள் பறிமுதல்; ரூ. 1.25 லட்சம் அபராதம்

கொடைக்கானல்; கொடைக்கானலில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு செய்து 3 கார்கள் பறிமுதல் செய்து ரூ. 1.25 அபராதம் விதித்தார். வத்தலக்குண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ கொடைக்கானல்நகர் பகுதியில் ஆய்வு செய்தார். பதிவு சான்றிதழ் ,அனுமதி சான்றின்றி இயக்கப்பட்ட 3 வாகனங்களை பறிமுதல் செய்து கொடைக்கானல் போலீசில் ஒப்படைத்தார். சீட் பெல்ட், இன்சூரன்ஸ், தகுதி சான்று இல்லாத ஏராளமான வாகனங்களை ஆய்வு செய்து ரூ. 1.25 அபராதம் விதித்தார். அவர் கூறுகையில், ''மலைப்பகுதி முழுமையும் தொடர்ந்து ஆய்வு செய்யும் நடவடிக்கை தொடரும். வாகனங்களை உரிய சான்றிதழோடு இயக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி