வாக்காளர் விழிப்புணர்வு
குஜிலியம்பாறை : கூம்பூர் வாரச்சந்தையில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சந்தைக்கு வந்த பொதுமக்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாசில்தார் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பங்கேற்றனர்.