நீர் மேலாண்மை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
வடமதுரை: அய்யலுாரில் நீர் மேலாண்மை பாதுகாப்பு, விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. நீர் ஆர்வலர் மகிடேசுவரன் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ணன், தினேஷ்பாபு முன்னிலை வகித்தனர். சமீபத்தில் தும்மினிக்குளத்திற்கு வரட்டாறு நீர் தடங்கலின்றி வந்து சேரும் வகையில் நடந்த மராமத்து பணிகள், அதற்கான வரவு, செலவு விபரங்களை அறிக்கையாக வெளியிடப்பட்டது.