காட்டுபன்றி வேட்டை: ஒருவர் கைது
திண்டுக்கல் : செட்டியபட்டி வேளாங்கண்ணி புரத்தை சேர்ந்த ஆல்வின் எடிசன் 29. அதேபகுதியில் உள்ள இவரின் தோட்டத்தை வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில் வனக்காப்பாளர்கள் அரவிந்தன், புகழ்கண்ணன், ருத்தரமூர்த்தி, காமேஷ் தணிக்கை செய்தனர். வேட்டையாடி வைத்திருந்த 11 கிலோ காட்டுப்பன்றியின் கறி , வெட்டுக்கத்தி கைப்பற்றப்பட்டது. ஆல்வின்எடிசன் கைது செய்யப்பட்டு ரூ. 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.