உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

 காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

பழநி: பழநியில் விளை நிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதம் செய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பழநியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் தென்னை, மா, கொய்யா, கரும்பு, மக்காச்சோளம், நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். காட்டுப்பன்றி, காட்டெருமை, மயில் போன்றவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்கிறது. மலையோரம் உள்ள நிலங்களில் யானை தொல்லை அடிக்கடி உள்ளது. வெகு தொலைவில் உள்ள நிலங்களில் காட்டுப்பன்றி தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நிலங்களை சுற்றிலும் துணிகளை கட்டி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை விவசாயிகள் எடுத்து வருகின்றனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ