உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்கள் சுற்றி வளைப்பு

பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்கள் சுற்றி வளைப்பு

வேடசந்துார்: வேடசந்துார் கருக்காம்பட்டி பாலம் அருகே இளைஞர்கள் இருவர் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அப்பெண் சத்தமிட்டதை கண்ட பொதுமக்கள் இளைஞர்களை தட்டி கேட்டுள்ளனர்.அருகில் உள்ள பூட்டப்பட்ட கட்டடத்தின் காம்பவுண்ட் சுவற்றில் ஏறி குதித்துள்ளனர். ஒருவர் தப்பி விட ஒருவருக்கு கால் முறிந்தது. மருத்துவமனை சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !