உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்வி நிறுவன பஸ் மீதுகார் மோதி விவசாயி பலி

கல்வி நிறுவன பஸ் மீதுகார் மோதி விவசாயி பலி

கல்வி நிறுவன பஸ் மீதுகார் மோதி விவசாயி பலிகோபி:கோபி அருகே சாலையில் நின்றிருந்த, தனியார் கல்வி நிறுவனத்தின் பஸ் மீது, கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.கோபி அருகே பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன், 59, விவசாயி; இவர் தனது மாருதி காரில், கோபியை நோக்கி ஒத்தக்குதிரையை கடந்து நேற்று மதியம், 1:30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தாசம்பாளையம் என்ற இடத்தில், சாலையின் இடதுபுறமாக நின்றிருந்த, கோபி தனியார் கல்வி நிறுவனத்தின் பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜன் இறந்தார். கோபி போலீசார், தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய கோவிந்தராஜன் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவிந்தராஜன் மகன் தினேஷ், 33, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை