ஆப்பக்கூடல் நால்ரோட்டில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
ஆப்பக்கூடல் நால்ரோட்டில்அதிகாரிகள் குழுவினர் ஆய்வுஅந்தியூர், ஆக. 25-அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் நால்ரோட்டில், கவுந்தப்பாடி, பவானி, அந்தியூர் மற்றும் சத்தி செல்லும் நால்ரோடு உள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து அதிகம் உள்ளது. இதனால் அடிக்கடி நெரிசலும், விபத்தும் நேரிடுகிறது. இப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணி மேற்கொள்ள, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆப்பக்கூடல் நால்ரோட்டில் சத்தி சாலையில், 1.80 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளை துவங்கும் பணியில் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.