உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலி பிறப்பு சான்றிதழ்தயாரித்த நால்வர் கைது

போலி பிறப்பு சான்றிதழ்தயாரித்த நால்வர் கைது

போலி பிறப்பு சான்றிதழ்தயாரித்த நால்வர் கைதுஈரோடு,:போலி பிறப்பு சான்றிதழ் தயார் செய்தது தொடர்பாக, வீரப்பன்சத்திரம் வி.ஏ.ஓ., அன்பழகன், வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.இதன்படி விசாரணை நடத்திய போலீசார், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கிழக்கு காவிரி நகரை சேர்ந்த பாலாமணி, 39; பள்ளிபாளையம், ராஜவீதி யுவராஜ், 41; இ-சேவை மையம் நடத்தும் குமாரபாளையம், கல்லாங்காடு யுகேஷ், 29; ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர்., வீதி பாலகிருஷ்ணன், 43, ஆகியோரை கைது செய்தனர். இதில் மேலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.அரசு ஊழியர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனத்தெரிகிறது. கைதான யுகேஷ், பாலாமணி மீது மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது என்றும், போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை