நாளை வருவாய் கோட்ட வேளாண் கூட்டம்
நாளை வருவாய் கோட்ட வேளாண் கூட்டம்ஈரோடு வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா விவசாயிகளுக்காக, வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், ஈரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நாளை நடக்கிறது. ஆர்.டி.ஓ., ரவி தலைமை வகிக்கிறார். விவசாய நில அளவீடு, விவசாய நிலங்களில் பிரச்னை, பாதை, ஓடைகளில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்னை தொடர்பான கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.