மகன் கண்ணெதிரில்லாரி ஏறி தாய் பலி
மகன் கண்ணெதிரில்லாரி ஏறி தாய் பலிகோபி: கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45; கூலி தொழிலாளியான இவர் தனது தாய் சாவித்ரியுடன், 65, டி.வி.எஸ்., மொபட்டில், கோபி சிக்னல் அருகே நேற்று மதியம் சென்றார். அமர்ந்து பயணித்த சாவித்ரி நிலைதடுமாறி விழுந்ததில், பின்னால் வந்த டிப்பர் லாரி ஏறி இறங்கியது. கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மகன் வெங்கடேஷ் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.