மேலும் செய்திகள்
முதியவர் தற்கொலை
21-Mar-2026
வெள்ளோட்டை அடுத்த தலையக்காட்டூர் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில், ஆண் உடல் மிதப்பாக, வி.ஏ.ஓ., செந்தில்முருகனுக்கு தகவல் போனது. அங்கு சென்று பார்வையிட்ட நிலையில், வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வாய்க்காலில் மிதந்த, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
21-Mar-2026