உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தியமங்கலத்தில் ரோட்டரி பொறுப்பாளர்களுக்கு பயிலரங்கம்

சத்தியமங்கலத்தில் ரோட்டரி பொறுப்பாளர்களுக்கு பயிலரங்கம்

சத்தியமங்கலம்:ரோட்டரி மாவட்டம்-3203ன், மாவட்ட பயிலரங்கம் ரோட்டேரியன் சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் ஸ்ரீ சுந்தர் மஹாலில் நடைபெற்றது. கல்வியாளர் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பயிலரங்கத்தில் மாவட்ட ஆளுநர் தனசேகர், வருங்கால ஆளுநர் பூபதி, முன்னாள் ஆளுநர்கள் இளங்குமரன், கார்த்திகேயன், வல்லபதாஸ், சிவசங்கர், சகாதேவன், சண்முக சுந்தரம், சுந்தர்ராஜன், சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோட்டரி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை