வேளாண் குறைதீர் கூட்டம்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வரும், 28ல் மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது.அன்று காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை விவ-சாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான பிரச்னைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 மணி முதல், 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும். விவ-சாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்.