முப்பெரும் விழாவில்ஆசிரியர்களுக்கு பாராட்டு
முப்பெரும் விழாவில்ஆசிரியர்களுக்கு பாராட்டுசங்ககிரி:தமிழக ஆசிரியர் கூட்டணி சங்ககிரி தாலுகா சார்பில், நடப்பு கல்வியாண்டில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, 3 ஆண்டுக்கு மேல் அலுவலக பணியாற்றிய சங்ககிரி வட்டார கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா சங்ககிரியில் நேற்று நடந்தது. வட்டார தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.அதில் பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர்கள் சந்திரசேகர், புவனேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர் ரமணி, இடைநிலை ஆசிரியர் சரஸ்வதி, அலுவலக பணியாற்றிய வட்டார கல்வி அலுவலர்கள் கோகிலா, அன்பொளி, நல்லாசிரியர் விருது பெற்ற இடைநிலை ஆசிரியை பாக்யலட்சுமி ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார செயலர் கண்ணன், ஆசிரியர் கூட்டணியின் மகளிர் அணி செயலர் ஜெயந்தி, மாவட்ட துணை செயலர் அன்பரசு, மாநில துணை செயலர் ஜான், சேலம் மாவட்ட தலைவர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.