உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பச்சைமலையில் பால்குடம் ஊர்வலம்

பச்சைமலையில் பால்குடம் ஊர்வலம்

கோபி:கோபி அருகே பச்சைமலை முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, சண்முக கலச சத்ரு சம்ஹார ேஹாமம், 108 சங்காபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.முன்னதாக காலை 8:30 மணிக்கு, சண்முக கலச சத்ரு சம்ஹார ேஹாமம் நடந்தது. இதை தொடர்ந்து பச்சைமலை அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவிலில் இருந்து, 450க்கும் மேற்பட்டோர் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர். அங்கு மதியம், 12:15 மணிக்கு, பாலாபிேஷகம், 108 சங்காபி ேஷகம் நடந்தது. இதை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேளதாளம் முழங்க பால்குடம் ஊர்வலம் நடந்ததால், பச்சைமலை முருகன் கோவில் விழாக்கோலம் பூண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை