உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி மாணவியருக்கு விடுதி திறப்பு

பள்ளி மாணவியருக்கு விடுதி திறப்பு

அந்தியூர்: அந்தியூரில் அரசு கலை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கான விடுதி, 2024ல் திறக்கப்பட்டது. இந்நிலையில் மாணவியருக்கும் விடுதி அமைக்க கோரிக்கை எழுந்தது. இதைய-டுத்து அத்தாணி அருகே மூங்கில்பட்டியில், அரசு மிகவும் பிற்ப-டுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதியில், அந்தியூர் கலை கல்லுாரி மாணவிகளும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த விடு-தியை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார். நிகழ்வில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பு செயலாளர் பிரகாஷ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.* பவானி அருகே தொட்டிபாளையம் பஞ்., ஜீவா நகரில், ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்-துசாமி கடையை திறந்து வைத்து, மக்களுக்கு பொருட்கள் வழங்கி துவக்கி வைத்தார். பவானி அருகே மைலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கலையரங்கத்தையும் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ