உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடு மேய்த்த முதியவர் பாம்பு கடித்ததில் பலி

ஆடு மேய்த்த முதியவர் பாம்பு கடித்ததில் பலி

ஆடு மேய்த்த முதியவர்பாம்பு கடித்ததில் பலிகோபி, செப். 18-கோபி அருகே, ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவர் பாம்பு கடித்து பலியானார்.கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 69, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 5ம் தேதி காலை, 11:30 மணிக்கு துளசி நகர் என்ற இடத்தில், ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அவரின் இடது கால் கட்டை விரலில் விஷபாம்பு கடித்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, கோவை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார்.இதுகுறித்து அவரின் மகன் நாகராசன், 43, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !