அரவை ஆலைகளில் ஆய்வு
ஈரோடு: குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி சரவணன், ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பிறகு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரிசி அரவை ஆலைகளில் சோதனை செய்தார். ஆலைகளில் கட்டாயம் கேமரா பொருத்த வேண்டும். நெல், அரிசி மற்றும் மின்சார செலவிடுதல் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். அரசு ஒதுக்கிய நெல்லை முறையாக பயன்படுத்த ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.