போகி பண்டிகை தினத்தில் 13.5 டன் குப்பை அகற்றம்
காங்கேயம், :போகியை ஒட்டி, காங்கேயம் நகராட்சியில், 18 வார்டு பகுதிகளில் தேவையற்ற பொருட்களான பழைய துணி, பாய் விரிப்பு, மெத்தை, பேப்பர், டயர், பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை, மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றினர்.இதில்லாமல் தினசரி குப்பையும் ஆங்காங்கே வழக்கம்போல் கொட்டப்பட்டது. நகராட்சி துாய்மை பணியாளர்கள், வானங்கள் மூலம் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரித்தனர். வழக்கமாக, 12 டன் குப்பை சேகரமாகும். போகி பண்டிகையை முன்னிட்டு, 13.5 டன் குப்பை சேர்ந்ததாக, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.