உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரே இரவில் 14 ஆடுகள் திருட்டு

ஒரே இரவில் 14 ஆடுகள் திருட்டு

பவானிசாகர், பவானிசாகரை அடுத்த பெரிய கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ், 55; ஆடு வளர்த்து வருகிறார். கடந்த, 17ம் தேதி நள்ளிரவில் வீட்டு முன்பு கட்டியிருந்த இரு ஆடுகளை, மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த கருப்பன், 80; வீட்டு முன் கட்டியிருந்த எட்டு ஆடுகள், ரங்கன், 88, வளர்த்து வந்த நான்கு ஆடுகளையும் திருடி சென்றுள்ளனர். ஒரே இரவில், 14 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம், மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பவானிசாகர் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை