டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 1,471 பேர் ஆப்சென்ட்
ஈரோடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 3,208 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,737 பேர் மட்டுமே நேற்று பங்கேற்றனர். 1,471 பேர் தேர்வெழுதவில்லை. நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளி யில் நடந்த தேர்வை, கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார்.