உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

கல்லுாரி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே மொசுக்கவுண்டனுாரை சேர்ந்த தொழிலாளி சேகர் மகள் கார்த்திகா, 18; நாமக்கல் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தனியார் கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம் இரவு கல்லுாரிக்கு செல்ல மாட்டேன் என்று கார்த்திகா கூறியுள்ளார். இதனால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை குளிக்க சென்ற கார்த்திகா, பாத்ரூமில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். * வெள்ளித்திருப்பூர் அருகே கொமராயனுார், மசக்கவுண்டனுாரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் விவேக், 29; விவசாயி. திருமணமாகாத ஏக்கத்தில் இருந்தார். பாப்பாத்திக்காட்டுப்புதுாரில் உள்ள பாட்டி தோட்டத்துக்கு சென்றவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று இறந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை