2,000 டன் நெல் வரத்து
ஈரோடு:ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக நாகை மாவட்டத்தில், 2,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தனி சரக்கு ரயிலில் ஈரோடு கூட்ஸ்செட்டுக்கு நேற்று வந்தது. நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து அரிசியாக மாற்றப்பட்டு, பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும்.