உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடுக்கு வரத்தான 2,000 டன் நெல்

ஈரோடுக்கு வரத்தான 2,000 டன் நெல்

ஈரோடு :கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து சரக்கு ரயிலின், 42 பெட்டிகளில், 2,000 டன் நெல் நேற்று ஈரோடு கூட்ஸ் ெஷட்டுக்கு வரத்தானது. அவற்றை ரயிலில் இருந்து இறக்கி, சரக்கு லாரிகளில் சுமை தொழிலாளர்கள் ஏற்றினர். பின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, விரைவில் தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அரிசியாக்கப்பட்ட பின் பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை