2,௦௦௦ டன் நெல் வருகை
ஈரோடு: திருத்துறைபூண்டியில் இருந்து கூட்ஸ் ரயிலில் ஈரோட்டுக்கு, 2,௦௦௦ டன் நெல் நேற்று வந்தது. ரயிலில் இருந்து சுமை தொழிலாளர்கள் இறக்கி, லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பின் அரிசியாக்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்படும்.