உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 203 மனு வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் 203 மனு வழங்கல்

ஈரோடு,ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மொத்தம், 203 மனுக்கள் வந்தன. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் ஐந்து பேருக்கு இலவச தையல் மிஷின், ஐந்து பேருக்கு இலவச சலவை பெட்டி, பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை என, 20 பேருக்கு நல திட்ட உதவி வழங்கப்பட்டது.டி.ஆர்.ஓ. சாந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நுர்ஜஹான், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !