28ல் வேளாண்குறைதீர் கூட்டம்
28ல் வேளாண்குறைதீர் கூட்டம்ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும், 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு கலெக்டர், ராஜகோபால் சுன்கரா தலைமையில், மாவட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. காலை, 10:00 முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பாக தங்கள் பிரச்னைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 முதல், 1:30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிப்பர்.