உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 315 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 315 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது.மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உட்பட, 315 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டன. திருநங்கைகள், திருநம்பிகள் சுய தொழில் துவங்க தலா, 50,000 ரூபாய் வீதம், 10 பேருக்கு வழங்கப்பட்டது.10 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டி, பெண் ஓட்டுனர் சொந்த ஆட்டோ வாங்க, ஒரு லட்சம் ரூபாய், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளின் மருத்துவ படிப்புக்கு, 50,000 ரூபாய் என, 22 பயனாளிகளுக்கு, 7.23 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி