உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் தாலுகாவில் 35 பட்டாசு கடைகள்

காங்கேயம் தாலுகாவில் 35 பட்டாசு கடைகள்

காங்கேயம், தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. முன்னதாக காங்கேயம் தாலுகாவில் பட்டாசு கடை திறக்க, 38 பேர் விண்ணப்பித்திருந்தனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தாராபுரம் ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா, காங்கேயம் தாசில்தார் மோகனன் விண்ணப்பங்களை பரிசீலித்தனர். இதை தொடர்ந்து காங்கேயம் தாலுகாவில் காங்கேயம், வெள்ளகோவில், முத்துார், நத்தகாடையூர், ஊதியூர் பகுதிகளில், ௧௬ நிரந்தர கடைகள், ௧௯ தற்காலிக கடைகள் என, 35 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். கடைக்கார்ரகள் உரிய விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை